மணிப்பூரில் 3.4 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் காம்ஜோங் மாவட்டத்தில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிலநடுக்கமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் காலத்தில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஏற்கனவே கடந்த இரண்டாம் தேதி மணிப்பூரின் சாந்தல் மாவட்டத்தில் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.