உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் உள்ள செக்டார் 51-இல், டி பிளாக்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தின் சமையலறையில் உள்ள கூரை அமைப்புக்குள், அலங்கார விளக்கு பொருத்துதலின் உள்பக்கம் பாம்பு மறைந்திருந்தது. வெளிச்சத்தின் உள்ளே பாம்பு நகர்வதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வனத்துறையிடம் தகவல் அளித்தனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் 36 மணி நேரம் போராட்டத்திற்கு பின், நாகப்பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. பாம்பு ஓக்லா பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெறும் வரை பயத்தில் வாழ்ந்த குடும்பத்தினர், வீட்டின் மேல் மாடிகளில் தங்களை பூட்டிக்கொண்டதாகவும், இரண்டு நாட்கள் வெளியே இருந்து உணவு வாங்கி சாப்பிட்டதாகவும் பயத்துடன் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்தக் காட்சிகளில், மூடிய கூரையின் உள்ளே அலங்கார விளக்குப் பகுதியில் பாம்பு சறுக்கி நகரும் திகிலான தருணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.