சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஆகஸ்ட் 4 அதாவது வெள்ளிக்கிழமை இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு மார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமை இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலில் இரு முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், ஒன்பது படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஐந்து பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளி பெட்டிகள் உள்ளதாகவும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புர, விருதாச்சலம், அரியலூர், திருச்சி ,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூ, கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.