கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற குறும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அந்த கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் நங்கவரத்தில் வசிக்கும் ஜீவானந்தம் என்ற வாலிபர் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார்.

அவரது தாத்தா நாகராஜன். அவர் 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டினி இன்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும் நாகராஜன் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார். அவர் உயிரிழந்து விட்டார். இதனால் தாத்தாவின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தொடர்ந்து 15-வது ஆண்டாக ஜீவானந்தம் படிக்கட்டுகளில் ஏறி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.