மகள்களை பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள் என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தில் நாடிகன் என்ற கிராமத்தை சேர்ந்தவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணமோ ஆம்புலன்சை அழைப்பதற்கு செல்போனும் அவர்களிடம் கிடையாது.

இதனால் அவரது 14 வயது மகள் தன்னுடைய தந்தையை தள்ளு வண்டியில் அமர வைத்து 35 கிலோமீட்டர் தூரம் பெடல் மிதித்து ஓட்டி வந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து தற்போது அவர் நலமாக உள்ள நிலையில் சிறுமியின் இந்த தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.