தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இப்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அண்மையில் ஆரியபுரத்தில் விஜய் புதிய பிளாட் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் விஜய் வாங்கிய அபார்ட்மெண்ட்டில் பான் இந்தியா நடிகராக வலம் வரக்கூடிய துல்கர் சல்மான் ஒரு பிளாட் வாங்கியுள்ளாராம். அந்த பிளாட் மதிப்பு ரூபாய் 30 கோடி இருக்கும் என சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.