நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 10, +2 பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை இன்று  நடிகர் விஜய் சந்தித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் நடைபெறும் இந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கபபடுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கோட்டையில் பேட்டி அளித்தபோது “நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பு இல்லை. என்னிடம் இருக்கும் இளைஞர்கள் வேறு, விஜய்யிடம் இருக்கும் இளைஞர்கள் வேறு. நான் அண்ணன், அவர் தம்பி. பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவித்தால் பாஜகவை ஆதரிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.