உஜ்ஜையினியில் சமீபத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தெருவில் ஆடையின்றி நடந்து சென்றது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தம் சொட்ட சாலைகளில் நடந்து சென்ற வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு (BJP) நிவாரணமாக வெறும் ரூ.1,500 மட்டுமே கொடுத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், சிறுமி தலித் என்பதால், அவரின் குடும்பத்தினருடன் யாரும் பேசுவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.