தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கமலஹாசன் நேற்று சென்னையில் உள்ள் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர், “தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன்.

ஆனால் அது தவறு என்று ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், ஒருபோதும் அவசரப்பட கூடாது. வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம். அது வரும்போது வரட்டும், நீங்களாக தேடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.