தமிழகத்தில் கடந்த 2010 -11 ஆம் ஆண்டில் தற்காலிகமாக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும் அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.