
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் திருநங்கைகள் ஒரு பெண்ணை அடித்து ரோட்டிற்கு இழுத்து சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணும் திருநங்கை ஒருவரின் சகோதரரும் அருகருகே வசித்து வருகின்றனர்.
அந்த பெண்ணுக்கும் திருநங்கையின் சகோதரர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த பெண்ணை அடித்து நடுரோட்டில் எழுத்து சென்றதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.