சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரசிகர்கள் லியோ திரைப்படத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விஜய் மற்றும் லோகேஷ் 2வது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்தது, பின் சென்னையில் நடைபெற்றது.

லலித் குமார் லியோ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரையிலும் லியோ படம் ரூ. 400 கோடிக்கும் மேல் பிசினஸ் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏனெனில் ஒருமுறை நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமாரை தன் அலுவலகத்திற்கு 12 மணிக்கு வர சொல்லியிருக்கிறார்.

தயாரிப்பாளர் லலித் குமார் 12 மணிக்கு சென்ற நிலையில், விஜய் 12.10-க்கு அங்கு வந்துள்ளார். உள்ளே வந்ததும் 10 நிமிடம் தாமதமாக வந்ததற்கு லலித் குமாரிடம் விஜய் மன்னிப்பு கேட்டாராம். டிராஃபிக்கில் இருந்து வருவதற்கு தாமதம் ஆகி விட்டது என சொல்லி விஜய் சார் தன்னிடம் மன்னிப்பு கேட்டார். அதுதான் அவருடைய பெரிய மனசு என தயாரிப்பாளர் லலித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.