தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலை தம்பி, நீ எடுத்து இருக்கிறது வெறும் போலீஸ் ட்ரைனிங், நான் எடுத்திருப்பது போராளி டிரெய்னிங், நீ ரொம்ப சாதாரணம் என் முன்னாடி என சீமான் கூறியுள்ளார்.

மேலும் உனக்கு பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருவாரு. எனக்கு நான்தான் ஓட்டு கேட்பேன். அப்ப நான் தான்டா கெத்து என மீண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வம்பிழுக்கும் விதமாக தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.