எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.