தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சட்டமேதை அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் எதுவும் இன்று இயங்காது.

அதுமட்டுமின்றி புத்தாண்டு தினமான இன்று விடுமுறையை தொடர்ந்து, நாளை சனி, மறுநாள் ஞாயிறு என 2 நாளுமே விடுமுறையாக உள்ளது. இதனால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் தமிழக போக்குவரத்துத்துறை சார்பாக  வருகிறது.