4,133 மருத்துவம், மருத்துவம் சார்ந்த காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில் மட்டும் 4133 காலிபணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துகள் கட்டுப்பாட்டிற்கான புதிய மண்டலம் உருவாக்கப்படும்.

மருத்துவக் கல்வி இயக்ககம், வரும் காலங்களில் மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் என்ற பெயரில் செயல்படும். பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் 10 பகுதிகளில் சித்த மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.