சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என சொல்லி கிளம்பி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற வீடியோக்கள் உண்மையில்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் பணியாற்றலாம் என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு பீகார் அதிகாரிகள் குழு விளக்கம் அளித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து பீகாரியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் குழு சென்னைக்கு வந்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.