நாடுளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.விக்னேஷை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் பேசும்போது, “அதிமுகவை அழிக்க நினைப்பவர்களே அழிந்து போவார்கள், தமிழ்நாட்டில் நான்கு பேர் முதல்வராக இருக்கின்றனர். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா, சபரீசன் என நால்வர் மாநிலத்தை ஆட்டிப்படைக்கின்றனர். இதற்கு முடிவு கட்டும் தேர்தல் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்” என்றார்.