கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் இன்று முதல் மே 21 வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, வெயில் தாக்கத்தால் பலர் தூக்கத்தை இழந்து, வேதனையுடன் இருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கையால் பீதியடைந்துள்ளனர்.

அதிக வெப்பநிலை-அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் அலர்ட்டாக இருக்கவும். மேலும் மதிய நேரத்தில் வெளியில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குடித்து வெயிலுக்கு தகுந்த உணவை உண்டு உடலை காக்க வேண்டியது அவசியம்.