தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்ற நடைமுறை நேற்று முதல் அமலாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.