குமரி, கீழகலுங்கடியை சேர்ந்த வேலம்மாள் (92) பாட்டி காலமானார். கொரோனா ஊரடங்கின்போது, தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்ற வேலம்மாள் பாட்டியின் புன்னகை போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானதால், அவர் மிகவும் பிரபலமானார். இன்றும் அரசு நலத் திட்ட உதவிகளுக்கு அவரின் போட்டோவை தான் மீடியாக்கள் பயன்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் புன்னகையரசி என பெயர் பெற்ற பாட்டிக்கு அரசு சார்பில் வீடு கட்டித் தரப்பட்டது.