பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக இருப்பதால் மற்ற மாநிலங்களை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள் என்று ஆளுநர் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அனைவருக்கும் பாதுகாப்பை தரும். அச்ச உணர்வின்றி வெளிமாநிலத்தவர் இங்கு இருக்கலாம். அங்கிருந்து இங்கு வருபவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.