சென்னையில் வருமானவரித்துறை சார்பில் இளம் தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாரிசு படம் வெளியான பிறகு தளபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட இருந்தோம். இன்னும் 10 நாட்களுக்கு பிறகு தளபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வரும்.

ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு படம் பார்த்து விட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். படம் பார்க்க வரும்போது ரசிகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உயிரே போகும் அளவுக்கு சினிமாவில் ஒன்றுமே இல்லை என்றார். மேலும் லோகேஷிடம் செய்தியாளர்கள் தமிழ்நாடு என்று அழைப்பீர்களா இல்லை  தமிழகம் என்று அழைப்பீர்களா என்று கேள்வி எழுப்பிய நிலையில், நான் தமிழ்நாடு என்றே அழைப்பேன் என்றார்.