பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மிருணாள் தாக்கூர். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இனிய இரு மலர்கள் என்ற தொடரிலும் நடித்துள்ளார். அதன்பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில்  மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக அறிமுகமானர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிருணாள் தாக்கூருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியது.

இந்நிலையில் நடிகை மிருணாள் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சூர்யா 42 திரைப்படத்தில் நடிகை மிருணாள் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் திசா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.