ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படையினர் 5,049 பேரை மீட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ900 கோடியை டிசம்பர் 12-ம் தேதியே கொடுத்துவிட்டோம். மேலும் இதை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில்  தமிழக மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் கோரிய நிதியை தராமல், பேரிடரில் தவிக்கும் தமிழக மக்களை கடுஞ்சொற்களால் விமர்சிக்கிறார். பிரதமர் மற்றும் முதல்வர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பொய் குற்றச்சாட்டுக்களை கூறி தமிழக அரசு மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.