லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக கட்சி உளவுத்துறை மூலம் தேர்தல் சர்வே பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகம் சார்பாக நடத்தப்படும் சர்வேயில் மக்களின் பூர்வீகம், வீடு மற்றும் நிதி விவரங்கள் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக தமிழகத்தில் மட்டும் 38 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த வருடம் 40 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் 6000 ரூபாய் வெல்ல நிவாரணம் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த உதவி தொகையால் மக்கள் எந்த விதத்தில் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறித்த கேள்விகளும் இந்த சர்வேயில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.