அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கக்கூடும். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வலுக்குறைந்து காணப்படும்.

அதே போல், இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, காரைக்கால் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.