தமிழகத்தில் ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை தமிழக அரசு விரிவுபடுத்தி உள்ளது. மொபைல் முத்தம்மா என்ற பெயரில் கடந்த ஆண்டு இந்த திட்டத்தை தமிழக அரசு நகர்புற பகுதிகளில் அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது UPI மூலம் பணம் செலுத்தும் நடைமுறையை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புற ரேஷன் கடைகளிலும் விரிவுபடுத்த அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.