தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய தோட்டங்களில் 1602 பணியிடங்கள் உள்ள நிலையில் அதில் 1422 பணியிடங்கள் நிரப்புவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது 812 பேரை தேர்வு செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களில் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் நடத்துனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.