கபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகின்றது. இந்த கூட்டத் தொடரில் காவிரி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் ஆளுநரின் செயல்பாடுகள், ஆசிரியர்கள் போராட்டம், டாஸ்மாக் மற்றும் ஆவின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுவதால் இந்த கூட்டத்தொடரில் என்ன நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.