தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம்தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. என் நிலையில் இன்று சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு மட்டும் நேரலை செய்ய மறுக்கப்படுவதாகவும் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் அப்பாவு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இருக்கும் அனைத்தும் இனிவரும் காலங்களில் நேரலையில் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.