தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள தற்காலிக மற்றும் நீண்ட கால நிரப்பப்படாத நிரந்தர பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக அரசு பள்ளிகளில் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று செயல்பட்டு வரும் அனைத்துவித தற்காலிக பணியிடங்களின் நிலையை ஆராய்வதற்கும் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள தற்காலிக பணியிடங்கள் மற்றும் நீண்ட கால நிரப்பப்படாத நிரந்தர பணியிடங்கள் உட்பட்ட விவரங்களை தொகுத்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய இருப்பதால் இதில் தனி கவனம் செலுத்தி பணிகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் செய்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் தற்காலிக மற்றும் நீண்ட கால நிரப்பப்படாத பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிகிறது.