இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசின் அகலவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தமிழக அரசு ஆவின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1700 ஆவின் ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு 34 சதவீதத்திலிருந்து நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஆறு மாவட்ட சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த அகல விலைப்படி உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பால் ஆவின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.