தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களிடம் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்த கூடாது என்று கூறிய அவர் பயோமெட்ரி கைரேகை பதிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏதாவது இருந்தால் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.