தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது வரை பொங்கல் பரிசு தொகை 6 லட்சம் பேர் வாங்கவில்லை என தெரிகிறது. இவர்களுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை ரேஷனில் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிகிறது.