சென்னையில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பணிமனை கிளை மேலாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே சமயம் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அனைத்து மாநகர பேருந்துகளுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பிறகு இயக்க வேண்டும் என்றும் மிகவும் மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.