தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாகவே பள்ளிக்கு வந்து மாணவர் வருகை, ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.