தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று அரசு விடுமுறை என்றாலும் தைப்பூச தினத்தில் பலர் பத்திரப்பதிவு செய்வார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக விடுமுறை நாள் ஆவண பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.