பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜன.12இல் ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ஜன. 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், பரிசுத் தொகுப்பை தருவதற்கு ஏதுவாக ஜன.12ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த பணி நாளை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் விடுப்பு வழங்கி அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.