தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பலனடைய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த முகாமுக்கு வரும் மாணவர்கள் ஆதார், பான் கார்டு, கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.