பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து முன் அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது.

விதிகளின் அடிப்படையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும். காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளையர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், போட்டிக்கு 2 நாளுக்கு முன் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்  விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.