2024ம் ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை கூட்டம் (05/01/2024) அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் இணைப்பு தொடர்பான புகார்கள், மாணவர்கள் உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகள், 10,11,12ல் தோல்வியடைந்தவர்களை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க நடைபெறும் இக்கூட்டத்தில், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது