தமிழ்நாடு முழுவதும் இன்று 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் நூறு இடங்களில் நடைபெறும் நிலையில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.