தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பில் உள்ள பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய அவர் அறிவுறுத்தியுள்ளார்.