சென்னையில் முதல் கட்டமாக அரசு பேருந்துகளில் யூபிஐ மூலம் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தாலும் அதனை சரி செய்யும் பணி நடந்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அதனைப் போலவே அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது சோதனையின் அடிப்படையில் உள்ளதாகவும் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பேருந்துகளில் எளிதில் யூபிஐ மூலம் பணம் செலுத்தி பயணிக்கலாம்.