தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறார் இதழ்களுக்கான பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை மூலமாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேன் சிட்டு என்ற சிறுவர் இதழ் அனைத்து பள்ளிகளுக்கும் வகுப்பறைக்கு ஒன்று என்ற முறையிலும் ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் என்ற இதழ் பள்ளிக்கு ஒன்று என்ற முறையிலும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் இந்த இதழ்களுக்கான பொறுப்பாசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளியின் கால அட்டவணைப்படி சிறார் இதழ்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மாணவர்களின் இதழ் வாசிப்புக்காக முழுமையாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.