தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 26ம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே தேடும் இளைஞர்கள் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் எனவும் வேலைவாய்ப்பு முகாமுக்கு நேரில் வரும்போது சுயவிவர குறிப்பு மற்றும் கல்வி சான்றுகள் என அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது