தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களில் உறுதி தன்மையை அதிகாரிகள் தீவிரமாக சோதித்து வருகிறார்கள்.

பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் அதற்குள் தங்களது வாகனங்களில் எந்த பிரச்சனையும் இல்லாத வகையில் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.