தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.