தமிழகத்தில் கூடுதல் ஏ.எஸ்பிக்கள் நான்கு பேரை எஸ் பி களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ எஸ் பி ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துறை ஆணையராகவும், விழுப்புரம் காவல் தேர்வு பள்ளி ஏஎஸ்பி ரமேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும், அரியலூர் ஏஎஸ்பி மலைச்சாமி சென்னை அறிவுசார் சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ் பி ஆகவும், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ எஸ் பி செல்ல பாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாளியன் கமாண்டன்டாகா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.